×

தூத்துக்குடிக்கு சுவீதா சிறப்பு ரயில்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு சுவீதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை தாம்பரத்திலிருந்து 18ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்படும் சுவீதா சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் 20ம் தேதி இரவு 6.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து  புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில் 2 மூன்றாவது வகுப்பு ஏசி பெட்டிகள், 10 தூங்கும் வசதி பெட்டிகள், 2 உட்காரும் வசதி பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம்,  விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swetha Special ,Thoothukudi , Swetha Special, Thoothukudi, Railway notice
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...