×

எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீசாரிடம் நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை: சயன், மனோஜை போலீசார் கோரிக்கைப்படி சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு வழங்குமாறு போலீஸ் தொடர்ந்து வாதம் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி மீது கொலைப் புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீசாரிடம் நீதிபதி சரமாரி வினா எழுப்பினர். சயன், மனோஜ் பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி சரிதா கேள்வி எழுப்பினார்.

கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா? எனவும், சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது?  எனவும் கேள்வி எழுப்பினார். புகாருக்கு உள்ளான எடப்பாடியிடம் விசாரித்து விளக்கம் பெற்றீர்களா என போலீசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. எடப்பாடி மீது புகார் கூறிய சயன், மனோஜ் 3 மணி நேரமாக நீதிமன்றத்தில் உள்ளனர். உங்கள் தரப்பு வழக்கறிஞர் யார்? என்று சயன், மனோஜிடம் நீதிபதி சரிதா கேள்வி எழுப்பினார். டெல்லியில் இருந்து வழக்கறிஞர் வாதாட வருவதாக நயன், மனோஜ் பதில் அளித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saramari ,Saian ,court ,Egmore ,Manoj , Judge,Saramari,questioned police,Saian,Manoj
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...