சென்னை : கோடநாடு எஸ்டேட் கொள்ளை விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடநாடு கொள்ளை நடந்து முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்றும், கோடநாடு விவகாரத்தில் நியாயம் எங்கள் பக்கம் உள்ளது என்று என்றும் அவர் கூறியுள்ளார். கொடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி வருவதால், யாரிடமாவது ஆதாரம் இருந்தால் போலீசாரிடம் கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அரசியலில் எதுவும் மாறலாம், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என தெரிவித்தார். மக்களவை தேர்தல் தேதி அறிவித்த உடனே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கோடநாடு கொள்ளை விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி