×

காரைக்கால் அருகே விளைநிலங்களை அழித்து விமானநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

காரைக்கால்: காரைக்கால் அருகே விளைநிலங்களை அழித்து விமானநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இரங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நெடுங்காட்டை சுற்றியுள்ள பொன்பேத்தி, செம்பியன்கால் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த விளைநிலங்களை கையகப்படுத்தி விமானநிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்பேத்தி கிராமமக்கள் கருப்புகொடியோடு வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

விளைநிலங்களை தவிர்த்து வேறு இடங்களில் விமானநிலையம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாகும். விளைநிலங்களை அழித்து அமைக்கப்படவுள்ள விமானநிலையம் தேவையில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டங்கள் தொடரும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farmlands ,Karaikal ,airport , Farmers,struggle,farmlands,Karaikal,airport
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...