×

ராகுல் பிரதமரானால் தான் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும்: திருநாவுக்கரசர் பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ரபேல் ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் மண்ணடி தம்புசெட்டி தெருவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சிவராஜசேகரன் தலைமை வகித்தார்.  இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசியதாவது: மத்தியில் 2019ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் ஆண்டாக அமையும். தமிழகத்தில் பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. அந்த கட்சி தற்போது சிதறிப்போய் கிடக்கிறது.  இப்போது திமுக, காங்கிரஸ் தான் பெரிய கட்சிகளாக  உள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பெரிய கட்சியாக விளங்குவது காங்கிரஸ் மட்டும்தான். தமிழகத்தில் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி அமைத்து காங்கிரஸ் கட்சி திறம்பட செயல்பட்டு வருகிறது. மத்தியில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ராகுல்காந்தி பிரதமரானால்தான் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் நல்ல காலம் வரும். விரைவில் அந்த காலம் வரும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,country ,Tirunavukkarar , Rahul,prime minister,good,people,country,Tirunavukkarar,speech
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...