×

சீன நிலக்கரி சுரங்கம் இடிந்தது: 21 பேர் பலி

பீஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மேல் பகுதி இடிந்து விழுந்ததில் 21 தொழிலாளர்கள் பலியாயினர். சீனாவில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. உலகிலேயே சீனாதான் அதிகளவில் நிலக்கரி வெட்டி எடுக்கிறது. இங்குள்ள சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படும். ஆனால், நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சுரங்க விபத்துகள் குறைந்தன.

இந்நிலையில், சீனாவின் சான்சி மாநிலத்தில் லிஜியாகோ என்ற நிலக்கரி சுரங்கத்தில்  தொழிலாளர்கள் நேற்று வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு இடத்தில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் புதைந்து 21 தொழிலாளர்கள் பலியாகினர். 66 பேர்  மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China , China,coal mine,collapses,killed
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...