×

பாதுகாப்பு படை தாக்குதல் அல்-பதர் தீவிரவாத இயக்க தளபதி பலி

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் அல்-பதர் தீவிரவாத இயக்க தளபதி உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள கட்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  உடனே, பாதுகாப்பு  படைகள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது, அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை சரணடையும்படி பாதுகாப்பு படை எச்சரித்தது. ஆனால், அவர்கள் தாக்குதலை தொடர்ந்தனர்.

இதையடுத்து, வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இவர்களில் ஒருவன் அல்-பதர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஜீனத் உல் இஸ்லாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மற்றொரு தீவிரவாதியின் பெயர் ஷகீர் தர். ஜீனத் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அல்- பதர் இயக்கத்தை விரிவுப்படுத்தவும், பலப்படுத்தவும் கடந்தாண்டு ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலகி. இந்த இயக்கத்தில் இவன் சேர்ந்துள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : security forces ,commander ,Al-Badar , security forces,attacked,Al-Badar,radical,commander
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...