புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி நேற்று அளித்த பேட்டி: ரபேல் வழக்கில் விசாரணையை தடுப்பதற்காக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையர் கே.வி.சவுத்ரி, மத்திய அரசின் கைப்பாவை போல் செயல்படுகிறார். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவர், சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அஸ்தானாவின் ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில், அலோக் வர்மாவை மோடி தலைமையிலான தேர்வுக்குழு நீக்கியுள்ளது என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி