திருவனந்தபுரம்,: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்திப் ெபற்ற மகரவிளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. இதற்காக, பந்தளத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. பிரசித்திப் பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடந்தது. மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்களை அணிவிப்பதற்காக, பந்தளம் வலிய ேகாயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து நேற்று மதியம் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.
இது, நாளை மாலை சன்னிதானத்தை அடையும். மாலை 6.35 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரியும்.
ஏராளமான பக்தர்கள் மகர ஜோதி தரிசிக்க வருவார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை மதிய பூஜைக்கு பின்னர் பக்தர்கள் 18ம் படியேற தடை விதிக்கப்படும். பின்னர் ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.