×

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை தர மறுத்த மனைவி வெட்டி கொலை

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(70). மனைவி ராசம்மாள்(65). இவர் கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்று மாதம் ஒருமுறை வீட்டிற்கு வருவார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த ராசாத்தி, அரசு வழங்கும் பொங்கல் பொருள் மற்றும் ₹1000த்தை ரேஷன் கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது, ‘‘ரேஷன் கடையில் தந்த பணத்தில் 500 ரூபாயை கொடு’’ என மனைவியிடம் ராமர் கேட்டுள்ளார்.ராசம்மா கொடுக்க மறுத்தார்.இதனால் நேற்று அதிகாலை 4 மணியளவில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராசம்மாவை தலையில் அரிவாளால் ராமர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pongal gift, wife cut and kill
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...