×

குந்தாரப்பள்ளி சந்தையில் ஒரே நாளில் ₹9 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் வரும் காணும் பொங்கல் விழாவில், மக்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக பொங்கலை ஒட்டி  வாரசந்தைகளில் ஆடுகள், நாட்டுக்கோழிகள் விற்பனை அதிகரிக்கும். இதற்காக கிராமப்புறங்களில் பலர் ஆடுகள், கோழிகளை வளர்த்து சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதன்படி, கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று ஆடு, கோழிகளை கொண்டு வந்தனர். இதேபோல், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் ஆடுகளை குந்தாரப்பள்ளி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்கிச் செல்ல, வேலூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்தனர். ஆடுகள் ₹6 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை விற்பனையானது.

இதுகுறித்து குந்தாரப்பள்ளியை சேர்ந்தவர்கள் கூறும்போது, வரும் 17ம் தேதி அன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். இதேபோல், கிராமங்களில் இஷ்ட தெய்வங்களுக்கு ஆடுகளை வெட்டி, பங்கிட்டு கொள்வார்கள். இன்று(நேற்று) ஒரு நாள் மட்டும் ₹9 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. ஒரு ஜோடி ஆடுகள் குறைந்தபட்சம் ₹12 ஆயிரம் முதல் அதிகபட்சம் ₹50 ஆயிரம் வரை விற்பனையானது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : krishnagiri ,Sheep ,chicken ,8 crores
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...