டெல்லி : தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அஸ்தானா, சிபிஐ டிஎஸ்பி தேவேந்திரகுமார் மீது சிபிஐ ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய அஸ்தானாவின் மனுவையும், சிபிஐ டிஎஸ்பி தேவேந்திரகுமாரின் மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி