×

வாணியம்பாடி பகுதியில் சாராய விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத போலீசார்

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் அதிகரித்து வரும் சாராய விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாணியம்பாடி அடுத்த ராமையன்தோப்பு பாலாற்றின் கிளையாற்றில் இரவு பகல் நேரங்களில் சாராயம் அதிகளவில் விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் இங்கு குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த சாராய விற்பனையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை  புகார் அளித்தும் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் போலீசில் புகார்  அளிப்பவர்களை மர்ம ஆசாமிகள் போன் செய்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இங்கு சாராய விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Vaniyambadi ,Jore , Vaniyambadi, Alcohol, Sales Jor
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...