×

மீனவர் வலையில் சீலா : தாராள விலையால் உற்சாகம்

ராமேஸ்வரம்: கடலுக்கு சென்று திரும்பிய பாம்பன் மீனவர்கள் வலையில் ஏராளமான சீலா மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று அனைத்து படகுகளும் ஒவ்வொன்றாக கரை திரும்பியது. இந்த படகுகளில் சீலா, பாறை, விலைமீன் உட்பட பலவகை மீன்கள் பிடிபட்டு இருந்தது.

பெரும்பாலான படகுகளில் சீலா மீன் வரத்து அதிகமாக இருந்தது.மீன்களை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், கூடைகளில் விற்பனைக்கு வரிசையாக வைத்தனர். சீலா மீன்கள் அனைத்தும் 10 கிலோ முதல் அதிகபட்சமாக 20 கிலோ எடை வரை இருந்ததால், ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை அதிக விலைக்கு போனது. மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி சென்றனர். கூடுதல் விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sila ,fisherman , Rameswaram, fishermen, Silas
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...