×

14 மாத பாத யாத்திரை ஸ்ரீகாகுளத்தில் நிறைவு: ஒய்எஸ்ஆர் காங். ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று 14 மாத பாத யாத்திரையை ஸ்ரீகாகுளத்தில் நிறைவு  செய்த ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன்  ரெட்டி பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கடப்பா மாவட்டம், இடுப்புல பாயாவில் தனது பாத  யாத்திரையை தொடங்கினார். 341 நாட்கள் பாத யாத்திரையின் மூலம் 3,648 கிமீ கடந்து ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரத்தில் நேற்று தனது பாத  யாத்திரையை நிறைவு செய்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரையையொட்டி இச்சாபுரத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி  அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தால் 13 மாவட்டங்களாக உள்ள ஆந்திர மாநிலத்தை 25 மாவட்டங்களாக மாற்றப்படும். ரேஷன் பொருள்கள் அனைத்தும் நேரடியாக  வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும். விவசாயிகளுக்கு முதலீட்டு தொகையை குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். பகல் நேரத்தில்  ஒன்பது மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,Srikakulam ,home , 14 month foot pilgrims completed in Srikakulam: YSR Cong. If the power comes to the ration supplies will come home
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...