டெல்லி: சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி கோகோய் விலகியுள்ளார். தமக்கு பதில் நீதிபதி ஏ.கே.சிக்ரி குழுவில் இடம்பெறுவார் என நீதிபதி கோகோய் அறிவித்தார். அடுத்த சி.பி.ஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழு இன்று ஆலோகனை நடத்த உள்ளது எனவும் தெரிவித்தார். சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவிக்காலம் ஜனவரி.31-ம் தேதி முடிவடைகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி