திருமலை: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை வித்யாபாலன் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்த மறைந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு, என்.டி.ஆர். கதாநாயகுடு என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரை படத்தை இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணாவே அரசியல்வாதி என்.டி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும் நடிகர் ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பாலகிருஷ்ணாவும், வித்யாபாலனும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினர். படம் வெற்றி பெற வேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக பாலகிருஷ்ணா தெரிவித்தார். வழிபாடு முடிந்து வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினர்
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி