×

போரூர் அருகே துணிகரம்: இன்ஜினியர் வீட்டை உடைத்து 50 சவரன், ரொக்கம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

பூந்தமல்லி: போரூர் அருகே சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போரூர், கணேஷ் அவென்யூ, சக்தி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் மோகன் (58), சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, கேரளாவில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.  அங்கிருந்து நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் நகைகள், 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் 25 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போரூர் போலீசில் மோகன் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை தடயங்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,engineer ,Porur , Porur, engineer, 50 shaving, cash robbery
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?