தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 30 யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, ஒரு குட்டியுடன் 7 யானைகள் சுற்றித்திரியும் தகவல் கிடைத்து வனக்காவலர் மாரப்பா(55) மற்றும் குழுவினர், அங்கு சென்று அவற்றை விரட்டினர். தனியாக சிக்கிய யானை குட்டியை வனத்துறையினர் சூழ்ந்துள்ளனர். அப்போது பெண் யானை ஆக்ரோஷத்துடன் ஓடி வந்தது. மற்றவர்கள் ஓடிவிட மாரப்பாவை யானைதூக்கி வீசியது. இதில் அவர் இறந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி