×

குடிசையில்லா தொகுதியாக மாற்றுவேன்: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை 7 மணியளவில் மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம், பிரிந்தாவனம் தெரு, வீரபெருமாள் கோயில் தெரு, அப்பர் சாமி கோயில் தெரு, சிதம்பர சாமி கோயில் தெருக்கள், பால சுப்ரமணியம் தெரு, திரு வீதி அம்மன் கோயில் தெரு, பி.எஸ்.சாமி சாலை, ராயபேட்டை ஹைரோடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் வெற்றி பெற்றதும், குடிசையே இல்லாத தொகுதியாக மயிலாப்பூர் மாற்றப்படும். பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் வீடுகள் கட்டி தரப்படும். அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படும். மீனவ மக்களுக்கு தரமான அங்காடி அமைக்கப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தருவேன். ரேஷன் பொருட்கள் சீராக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்,’ என்றார். பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை  போர்த்தியும், ஆரத்தி எடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று மாலை மயிலை  த.வேலுவை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உதயசூரியன்  சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்….

The post குடிசையில்லா தொகுதியாக மாற்றுவேன்: மயிலை த.வேலு வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayilai T. Velu ,Mayalapur ,Ganesapuram ,Bhindavanam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...