சென்னை: காதலனுடன் தனியாக பேசி கொண்டிருந்த கேரளா மாநில மாணவியை ரயில்வே ஊழியர் உட்பட 3 பேர் மிரட்டி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் ெசய்ய முயன்ற சம்பவம் தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி மற்றும் தரமணி பகுதியில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளதால் தரமணி பறக்கும் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இரவு நேரத்தில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், மயிலாப்பூர் பெண்கள் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி, தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் கல்லூரி முடிந்ததும் இருவரும் தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசுவது வழக்கம். இதற்கிடையே ேநற்று இரவு கேரளா மாணவியும் காதலனும் தரமணி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நடைமேடையில் தனியாக பேசி கொண்டிருந்தனர். அப்போது பயணிகள் யாரும் இல்லாததால் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது.
இதை பார்த்த தரமணி ரயில் நிலைய புக்கிங் கிளர்க் லோகேஷ் மற்றும் லிப்ட் ஆபரேட்டர்கள் லூகாஸ், ஸ்ரீராம் ஆகியோர், காதல் ஜோடியிடம் சென்று நாங்கள் ரயில்வே ஊழியர்கள் என்று கூறி இது போல் பொது இடத்தில் நடக்கலாமா என்று மிரட்டியுள்ளனர். மாணவியை நீ வெளியே போ என்று அனுப்பி விட்டு காதலனை மிரட்டி மற்றொரு வழியாக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மாணவியை பின் தொடர்ந்து சென்ற 3 பேரும் உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி முதல் தளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது உன் மீது வழக்கு பதிவு செய்தால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் உன்னை கைது ெசய்து சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்யுள்ளனர். ஒரு கட்டத்தில் 3 பேரும் மாணவியை முதல் தளத்தில் உள்ள இருட்டு அறைக்கு அழைத்து சென்று கட்டி அனைத்து கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். இதில் வலி தாங்க முடியாமல் மாணவி அலறி துடித்துள்ளார். சத்தம் போட்டதால், 3 பேரும் மாணவியை வாயில் துணியை அடைத்து ஆடைகளை கலைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, மாணவி 3 பேரையும் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்.
பின்னர் மாணவி சாலையில் ரோந்து பணியில் இருந்த தரமணி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது கல்லூரி மாணவியிடம் ரயில்வே புக்கிங் கிளர்க் லோகேஷ் மற்றும் லிப்ட் ஆபரேட்டர்கள் லூகாஸ், ஸ்ரீராம் ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. பின்னர் தரமணி போலீசார் சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளா கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தரமணி தந்தை பெரியார் நகரை சேர்ந்த புக்கிங் கிளர்க் லோகேஷ்(22), லிப்ட் ஆப்ரேட்டர்கள் லூகாஸ்(21), ராம் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். கைது ெசய்யப்பட்ட 3 பேரும் இதுபோல் பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி