×

202 சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 202 சார்பு ஆய்வாளர் பதவியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்பிடுவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் 22ம் தேதி துறை விண்ணப்பதாரர்களுக்கும், 23ம் தேதி ெபாது விண்ணப்பதாரர்களுக்கும் 8 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று இக்குழும இணையதளமான www.tnusrbonline.org-ல் வெளியிடப்பட்டுள்ளது.  

பொது விண்ணப்பதாரர்களுக்கு சென்னை தேர்வு மையத்தில் உடற்கூறு அளத்தல் மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தப்பட உள்ளன. துறை விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக நேர்காணல் தேர்வு குழும அலுவலகத்தில் விரைவில் நடத்தப்படுகிறது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : analysts , Release , written test results, position , 202 biased analysts
× RELATED சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின்...