×

பொங்கல் பண்டிகை நெருங்கினாலும் களையிழந்த சுண்ணாம்பு கல் விற்பனை

* உற்பத்தியாளர்கள் வேதனை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சியில் உள்ள களவாய்களில், பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில், சுண்ணாம்பு கல் விற்பனை களையிழந்துள்ளது. மேலும், விலை உயராததால் உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான கண்ணப்பன்நகர், மோதிராபுரம், அம்பராம்பாளையம், கோமங்கலம், கோட்டூர், சேரிபாளையம், ஆண்டிபாளையம், அங்கலக்குறிச்சி  ஆகிய இடங்களில்  சுமார் 75க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு களவாய்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்பு கல், கட்டிடம் கட்டுவதற்கும், வீட்டு கூறையின் மேல்பகுதியில் சுறுக்கி போடவும், வர்ணம் பூசுவதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக ஆர்டர் கொடுத்தும், நேரடியாகவும் வாங்கி சென்றனர்.

alignment=


 இதனால் அந்நேரத்தில், சுண்ணாம்பு கல் விற்பனை என்பது அதிகமாக இருந்ததுடன், அதன் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்க பெற்றது. இதற்கிடையே தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வீடுகளில் வர்ணம் பூசுவதற்காக களவாயில் சுண்ணாம்பு கற்களை சூடுபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
 ஆனால், வெளியூர்களில் இருந்து சுண்ணாம்பு கல்லுக்கான ஆர்டர்கள் மிகவும் குறைவாக உள்ளதால், அதன் விற்பனை தற்போது களையிழந்து உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து  சுண்ணாம்பு கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது, ‘ஈரோடு மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே சுண்ணாம்பு கல்(ஓடை கல்) கிடைக்கிறது. அதை களவாயில் சூடுபடுத்தி விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை அதிகமாகவே இருக்கும். அதனால் பொங்கல் பண்டிகை முடியும் வரை தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்கும். இந்த தொழிலில் 70 சதவீதம் பெண்களே ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகை மட்டுமின்றி பிற பண்டிகை நாட்களிலும் தங்கள் வீடுகளில் வர்ணம் பூச கிராமம் மற்றும் வெளியூர்களில் இருந்து நேரடியாக வந்து வாங்கி செல்வதை தொடர்ந்திருந்தனர்.

 ஆனால் இந்த நிலை கடந்த மூன்று ஆடுகளாக குறைந்துள்ளது. தற்போது பெரும்பலான வீடுகளுக்கு வண்ண வண்ண கலரில் வர்ணம் பூசுவதும், சுண்ணாம்பு கல் இல்லாத பொடிகளை வாங்கி பூசுவதில் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக களவாய்களில் சூடுபடுத்தி உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்பு கல்லின் விற்பனை குறைந்துள்ளது. மேலும், வெளியூர்களில் இருந்து ஆர்டர் இந்த முறை மிகவும் குறைவாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு  25 கிலோ எடை கொண்ட ஒரு சுண்ணாம்பை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதே நிலை இப்போதும் நீடித்துள்ளது.  வாகனங்களில் ஓடைக்கல் எடுத்துவர ஆண்டுதோறும் வாடகை கூடுதலாகிறது. ஆனால், கல்லை சூடுப்படுத்தி வெள்ளையடிக்க தகுந்தார்போல் சுண்ணாம்பு கல் உற்பத்தி செய்தாலும், அதற்காக உழைக்கும் தொழிலாளர்களின் கூலித் தொகையை போக லாபம் என்பது மிக மிக குறைவாக உள்ளது. இருப்பினும், மூதாதயர்கள் செய்து வந்த இந்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivals , lime stone,sale,good,Pongal festival
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...