×

ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை: வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி

சென்னை : ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் நடந்த விசாரணைக்கு பின் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சுகாதாரத்துறை செயலர் 3வது முறையாக இன்று ஆஜரானார். இந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்போலோவுக்கு வந்த அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி அமைச்சர்களுக்கு தெரிந்ததால் ராதாகிருஷ்ணன் அறிக்கையாக தாக்கல் செய்யவில்லை என்று சொல்லப்பட்டதாக வழக்கறிஞர் கூறினார்.


மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த தகவலைகள் குறித்தும் சுகாதாரத்துறை செயலர் கூறியதாக வழக்கறிஞர் கூறினார். இதனை தொடர்ந்து சுகாதார செயலரிடம் தான் குறுக்கு விசாரணை மேற்கொண்டதாக கூறிய வழக்கறிஞர், ஜெயலலிதாவிற்கு இருதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சை வழங்கப்படவில்லை ஏன் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த தகவல் குறித்து கேட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டதாக அவர் கூறினார். மேலும் அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் அப்பல்லோ மருத்துவமனை மீது புகார் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Raja Senthur Pandian ,interview , Jayalalitha's death, treatment, Raja Senthur Pandian, interview
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...