டெல்லி : ரஃபேல் விமானங்கள் வாங்க வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 36 விமானங்கள் தவிர மற்ற அனைத்து விமானங்களுக்கும் மேக் இன் இந்தியா திட்டம் பொருந்தும் என்று தெரிவித்த அவர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் வாஜ்பாய் காலத்தில் போடப்படவில்லை என்றும் கூறினார்.இதனிடையே ரஃபேல் விவகாரத்தில் நானும் பிரதமரும் பொய் சொல்கிறோமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில்,பிரதமரை தரக்குறைவாக பேசுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி