×

சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு நீதி வழங்க முடியாத மோடி முஸ்லிம் பெண்களை எப்படி காப்பார்?

சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு நீதி வழங்க முடியாத பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களை எப்படி பாதுகாப்பார் என்று காங்கிரஸ் சிறுபான்மை துறை கேள்வி எழுப்பியுளளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து துறைகளிலும் தோல்வியுற்று மக்களிடம் அன்னியமான நிலையில் ஆர்எஸ்எஸ்சின் நன்மதிப்பை பெறவே முத்தலாக் மசோதாவை அவசரமாக நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. காஷ்மீரில் கோயில் கருவரையில் 7 நாட்கள் பூட்டி வைத்து கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு நீதி வழங்க முடியாத மோடி முஸ்லிம் பெண்களை எப்படி காப்பார் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Modi , Modi protect Muslim women, justice , raped?
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...