×

குட்கா கடத்திய 2 பேர் கைது

பாரிமுனை: வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு ஆட்டோவை  மறித்து சோதனை செய்தனர். அதில் 2 மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த முருகன் (52), கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயகுமார் (24) என தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kidnapping ,Gudka , Two arrested, kidnapping, Gudka
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது