×

திண்டுக்கல்லில் பயங்கரம்: லோடுமேன் வெட்டிக் கொலை: கும்பலுக்கு வலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இன்று காலை மர்ம கும்பலால் லோடுமேன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முத்தழகுபட்டி மேற்கு தெருவை அருள்சாமி (48). லோடுமேன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று காலை 7 மணியளவில் பழநி ரோட்டில் முருகபவனம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் அருள்சாமியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து திண்டுக்கல் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே நடந்த ஒரு கொலை வழக்கில் அருள்சாமிக்கு தொடர்பு உள்ளதால், அதற்கு பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா போலீசார் விசாரித்து வருகின்றனர். நடுரோட்டில் கும்பலால், லோடுமேன் வெட்டி கொலை செய்யப்பட்டது திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Terror ,Dindigul ,Loddeman Vettik , Dindigul, Lotman, murder
× RELATED புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட...