×

திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்தவாறு பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம்:  திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன், மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பெண் சாமியார் நாகராணி ஆண்டுதோறும் 48 நாள் விரதமிருந்து மார்கழி 18ம் தேதி முள் படுக்கையில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.

40வது ஆண்டாக நேற்று கோயிலில் மார்கழி திருவிழா நடந்தது. கோயில் வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த கருவேலம் முள், இலந்தை முள், கற்றாழை முள் உட்பட 11 வகை முட்களாலான படுக்கையில் நின்றவாறும், படுத்தவாறும் நாகராணி அருள்வாக்கு கூறினார். இவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக சிவகங்கை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruppuvanam, mulpatukkai, priest
× RELATED விராலிமலையில் பட்டாசு கிடங்கில்...