×

மூத்த நடிகையை கடத்த முயன்ற வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

திருவனந்தபுரம்:  பிரபல மலையாள இளம் நடிகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  கார் டிரைவர் பல்சர் சுனில் உட்பட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.   கடத்தலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது  செய்யப்பட்ட நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்சர் சுனில் தலைமையிலான கும்பல் கடந்த 2012ம் ஆண்டில்  ஒரு மூத்த நடிகையையும் கடத்தி ஆபாச படம் எடுக்க திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.பிரபல தமிழ் முன்னணி நடிகையின் தாயான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து  பிரபலமாக இருந்தார். இளம் நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்சர் சுனில் கைது செய்யப்பட்டபோது, இந்த மூத்த  நடிகையும் கொச்சி போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு தன்னையும் பல்சர் சுனில் தலைமையிலான கும்பல் கொச்சி  ரயில் நிலையத்தில் வைத்து படப்பிடிப்புக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்த முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக  கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்சர் சுனிலை கைது செய்தனர்.

இது குறித்து  நடிகையின் கணவர் கூறியதாவது: கடந்த 2012ல் ஜோணி ஷாகரிகா என்ற தயாரிப்பாளரின் மலையாள படத்தில்  நடிப்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு எனது மனைவி ரயிலில் சென்றார். அங்கு என் மனைவியை அழைத்து  செல்வதற்காக கார் வந்தது.  அந்த கார் நீண்ட நேரமாக கொச்சியிலேயே  சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த என் மனைவி போனில்  என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.  இதையடுத்து ஜோணி ஷாகரிகா தலையிட்டதை தொடர்ந்துவிபரீதம் நடக்காமல் எனது  மனைவி தப்பித்தார். என்றார். இதனிடையே, மூத்த நடிகையிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரையும் ஆபாசப் படம் எடுக்க கும்பல் திட்டமிட்டது  தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை  தொடங்கியது. அப்போது பல்சர் சுனிலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ernakulam Court ,actress , case,Ernakulam Court,attempting,kidnap senior, actress
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...