×

ராமர் கோயில் கட்டும் விவகாரம் தீர்ப்புக்காக இந்துக்கள் காத்திருக்க முடியாது: விஎச்பி நெருக்கடி

புதுடெல்லி: ‘ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்துக்களால் காத்திருக்க முடியாது’ என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டுமென ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நேற்று முன்தினம் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியாக கூறிவிட்டார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தற்போதைய சூழலில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்துக்களால் காத்திருக்க முடியாது. அவசர சட்டம் இயற்றி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதுதான், நம்முன் இருக்கும் ஒரே வழி’’ என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crisis ,VHP ,Ram Temple , Ramar temple, Hindus, judgment, VHP
× RELATED கேரளாவில் கோயில் திருவிழாவின்போது...