புதுடெல்லி: எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தமிழகம் மீது பழிவாங்கும் நடவடிக்கை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் அனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. அணை கட்ட முடியாது என்றால் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி தந்தது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அரசின் நிலை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி