×

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை சம்பிரதாயம் போல இருந்தது : டிடிவி தினகரன்

சென்னை : 2019ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று தொடங்கியது. இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், ஆளுநர் பன்வாரிலால் உரை சம்பிரதாய உரையாக இருந்தது என்றும், அவரது உரை அறிவிப்புகள் வானத்திற்கும், பூமிக்கும் உள்ள இடைவெளி போன்றது என்றும் அவர் கூறியுள்ளார். பல பிரச்சனைகளில் மாநில உரிமை பாதிப்பு என ஆளுநரே கூறியுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.  மேலும் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் பெயர் ஜன., 4ம் தேதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhanwari ,Speech ,Legislative Assembly ,TTV Dinakaran , Assembly,Governor Panwarilal,TTV Dinakaran
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...