ஆலந்தூர்: ஆலந்தூர் அடுத்த நங்கநல்லூரில் 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் வரிசையில் நின்றபடி சென்று ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர். கோயில் சார்பாக புத்தாண்டையொட்டி ஒவ்வொரு வருடமும் பக்தர்களுக்கு 1 ரூபாய் நாணயம் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பக்தர்களுக்கு 1 லட்சம் 1 ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி