×

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களால் ஏற்படாது ஜெயலலிதாவின் புகழுக்கு சசிகலா குடும்பத்தாரால் களங்கம் ஏற்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக நிர்வாகி, தொண்டர்களால் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படாது. சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே களங்கம் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார். புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேற்று சந்தித்தார். பின்னர்  அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதியில் அதிமுக போட்டியிட்டு, இந்த ஆண்டின், முதல்  வெற்றியை பெற்றிடும். வியாபாரிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் அடிப்படையில், ஜிஎஸ்டி கூட்டத்தில், வரியை குறைப்பது குறித்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக 23  பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, சிறுகுறு வணிகர்களுக்கு வரியை குறைக்கும் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்துவோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்துக்கு, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை வெளி கொண்டு வரவேண்டும். இதை கவனிக்க வேண்டிய விஷயத்தில் கவனித்தால்தான்  உண்மை வெளிவரும். இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்களோ, அவர்களை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். சட்டத்துறை  அமைச்சர் கூறிய கருத்தை, அரசு பரிசீலனை செய்யும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்துக்கு, அதிமுக நிர்வாகிகளால், தொண்டர்களால் ஜெயலலிதாவின்  புகழுக்கு களங்கம் ஏற்படாது. சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே களங்கம் ஏற்படும்.கஜா புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதி கேட்டு, மத்திய அரசிடம் நிச்சயம் வலியுறுத்துவோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalakshmi ,interview ,Jayalalithaa , Jayalakshmi's,interview,Jayalakshmi,Jayalalithaa's reputation
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதியரின் கால்கள் முறிந்தன