போபால்: மத்தியப் பிரதேசத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்கள். மத்தியப் பிரதேசத்தின் பன்ன மாவட்டத்தில் வைர சுரங்கம் இயங்கி வருகின்றது. இங்கு வைரங்கள் குறைந்த ஆழத்திலேயே கிடைக்கும். வைரம் தேடும் பணி இங்கு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளூரில் வசிக்கும் பணக்காரர் மற்றும் ஏழை மக்களுக்கு 8க்கு 8 என்ற அளவில் ஆண்டு கட்டணத்திற்கு நிலங்களை குத்தகைக்கு விடுகிறது. அந்த இடத்தை தோண்டி, அவர்கள் வைரம் தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். யாருக்கு எந்த அளவில் வைரம் கிடைக்கின்றது என்பது அவர்களது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. வைரம் கிடைத்தவர்கள் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த வைரம் ஏலம் விடப்பட்டு அந்த பணம் அவர்களுக்கு வழங்கப்படும்.