×

திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி... 5பேர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானல் பழனி சாலையில் சவரிக்காடு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததால் காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கியபடியே உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்பகுதி மக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்பு ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவரக்காடு பகுதியில் இந்த ஆபத்தான பள்ளத்தாக்கில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Accident ,Dindigul ,Kilinochchi , Dindigul, car, accident, one killed, 5 injured
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்