×

பிரியாணி, மதுபாட்டிலுக்காக ஓட்டை விற்றார் நல்ல தலைவர் எப்படி வருவார்?; இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறி ஆக்குகின்றனர் : நீதிபதிகள் சரவெடி!!

மதுரை : பிரியாணிக்கு தங்கள் வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரியாணி, மதுபாட்டிலுக்காக தங்கள் வாக்குகளை மக்கள் விற்பனை செய்வதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியை அறிவிக்கக் கோரிய வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சரமாரி கேள்விகளை எழுப்பினர். விசாரணையின் போது, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதாவது:- ‘இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறியாக்காமல் அவர்களின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் வகையில் அறவிப்புகளை வழங்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது?. தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுகிறார்களா ?  பிரியாணி, மதுபாட்டிலுக்காக மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்கிறார்கள். வாக்குகளை விற்பனை செய்தால் நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன்பெறுவதால் மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது. நிதிச்சுமையை ஈடுகட்ட மதுக்கடைகள்  அறிவிப்பு என காரணம் காட்டப்படுகிறது, ‘ என்று கூறினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ‘சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கட்சியினர் அளிக்கின்றனர்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சியினரை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக் கூடாது?.தமிழ்நாட்டில் பொறியியல், முதுநிலை பட்டம் பெற்றவர்கள் கூட துப்பரவு தொழிலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது,’ என்று கவலை தெரிவித்தனர். …

The post பிரியாணி, மதுபாட்டிலுக்காக ஓட்டை விற்றார் நல்ல தலைவர் எப்படி வருவார்?; இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறி ஆக்குகின்றனர் : நீதிபதிகள் சரவெடி!! appeared first on Dinakaran.

Tags : Biryani ,Madurai ,Priyani ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி...