×

தாம்பரம்-கொல்லம் ரயிலை தினசரி இயக்க வேண்டும்

*பயணிகள் வலியுறுத்தல்

சிவகாசி : தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் தினசரி இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறு மார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து செவ்வாய், வியாழன் மாலை 3 மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 18 ஆண்டுகளுக்கு பின் கொல்லத்திற்கு ரயில் இயக்கப்படுவதால் கேரளா, தமிழக பயணிகளிடம் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படுவதால் பயிணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கேரளாவில் இருந்து அதிகமான பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பதால் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை பயணிகளுக்கு இந்த ரயிலில் பயணிப்பதற்கு இருக்கை வசதி கிடைப்பதில்லை. தற்போது கொல்லம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொல்லத்திற்கு தினசரி ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் தாம்பரம் ரயில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருவதால் கேரளா மாநிலம் சுற்றுலா செல்லும் பயணிகளும் அதிகளவில் ரயில் பயணித்து வருகின்றனர். ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களும் அதிக அளவில் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். எனவே தாம்பரம்-கொல்லம் ரயிலை பயணிகள் வசதி கருதி தினசரி ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலை கொல்லம் வரை நீடிக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kollam , Tambaram ,Kollam Express ,Passengers,southern railway,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...