×

கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதியுடன் சிறை சென்ற 88 வயதான பூவாளூர் ராசுக்கு ரூ. 25 ஆயிரம் நிதி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் கல்லக்குடி  போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற 88 வயதான திமுக பிரமுகர் பூவாளூர்  செபஸ்தியார் ராசுக்கு கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மு.க.ஸ்டாலின்  ₹ 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கரூர் மாவட்டத்தில் நடந்த விழாவில் கலந்து  கொண்டார்.

முன்னதாக திருச்சி சென்ற போது, 1953ல் மறைந்த திமுக தலைவர்  கலைஞர் தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரயில் மறியல்  போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரைச் சேர்ந்த  செபஸ்தியன் ராசு குடும்பத்தின் ஏழ்மை நிலையை மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார். இதைத் தொடர்ந்து பூவாளூர் ராசுவை நேரில் அழைத்து, கலைஞர் அறக்கட்டளை சார்பில்  மு.க.ஸ்டாலின் ₹ 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது திமுக துணை பொதுச்  செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி மாவட்டச் செயலாளர்கள்  கே.என்.நேரு, தியாகராஜன்  ஆகியோர் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Powwallur Ross ,MK Stalin ,Karunanidhi ,Kallukudi ,DMK , 88-year-old Powwallur Ross, Karunanidhi , Kallukudi struggle, 25 thousand , DMK president MK Stalin presented
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...