×

வள்ளியூரில் புதர்மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா

வள்ளியூர் :  வள்ளியூர் பள்ளிவாசல் தெருவில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. வள்ளியூர் பேரூராட்சி 14வது வார்டுக்குட்பட்ட காந்தி காலனி அருகே பள்ளிவாசல்  தெருவில் பேரூராட்சி பொதுநிதியில் இருந்து 10 செண்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பராமரிப்பின்றி புதர்மண்டி இப்பூங்கா காணப்படுகிறது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பூங்கா முழுவதும் செடி, கொடிகள் ஆக்கிரமித்து உள்ளன.

alignment=


சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்ட ஊஞ்சலில் அமரும் இடத்தில் தகரம் உடைந்து காணப்படுகிறது. புதர்மண்டி விஷஜந்துகளின் இருப்பிடமாக பூங்கா மாறியுள்ளதால் சிறுவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் அரங்கேற துவங்கியுள்ளன. குடிமகன்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்துவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகம், பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்காவை சீரமைத்து விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேவண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bugatti Children's Park ,Valluvar , Valliyur ,Childrens park,not in use
× RELATED திருக்குறளில் வேள்வி!