×

தீவிரவாதிகளை ஒடுக்க தேவைப்பட்டால் ஈராக் தளங்களில் இருந்து தாக்குதல் : ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் என கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்றிரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அமெரிக்க அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் ட்ரம்பின் இந்த ஈராக் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஈராக் நாட்டின் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு சென்ற ட்ரம்புக்கு அமெரிக்க - ஈராக் கூட்டுப்படைகளின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் பேசினார்.

கூட்டுப்படை வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டிய ட்ரம்ப், அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார். சிரியாவிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின், ட்ரம்ப் ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Attack ,sites ,Iraqi ,terrorists , US President, Trump, traveling to Iraq, terrorists threatened
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது