×

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் : பிப்., முதல் அமல்!

புதுடெல்லி : உள்நாட்டு வியாபாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பொருட்களை விற்கும் இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான், பிளிப்கார்ட் போன்றவை தங்கள் நிறுவன பொருட்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சில முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்களின் ஏதேனும் ஒரு பொருளை தங்கள் இணையதளம் மூலம் பிரத்யேகமாக விற்பதும் தடுக்கப்படுகிறது. எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை 25 சதவிகிதத்திற்கு மேல் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் விற்கக்கூடாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேஷ்பேக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பியளிக்கும் நடைமுறையை பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என ஆண்டுதோறும் ஆடிட்டர் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையளிக்கவும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் பண்டிகை கால அதிரடி தள்ளுபடியால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக உள்நாட்டு வியாபாரிகள் புகார் அளித்துள்ளதால் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் பிப்ரவர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : firms ,Flipkart ,Amazon ,First Amal ,PB , Amazon, Flipkart, federal government, controls
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...