×

கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் கருத்தரங்கம்

ஆலந்தூர்: சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்ற தலைப்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், தமிழக அமைச்சர்கள் கருப்பண்ணன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.தொடந்து அமைச்சர் கருப்பண்ணன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பாக்குத்தட்டு, மண் பாண்டங்கள், துணிகளால் உருவாக்கப்பட்ட பைகள், பேனர்கள் போன்றபொருட்கள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plastics Tamilnadu Seminar ,Gundi Pollution Control Board , Plastics Tamilnadu,Seminar , Gundi Pollution ,Control Board
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை