×

அமெரிக்காவில் வீடு தீப்பிடித்ததில் தெலங்கானாவை சேர்ந்த 3 சகோதர, சகோதரிகள் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் வீடு ஒன்றில் தீப்பிடித்து தெலங்கானாவை சேர்ந்த 3 சகோதர, சகோதரிகள் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா  மாநிலம், நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் பாஸ்டர் நாயக். இவர் நலகொண்டாவில் அமெரிக்காவின் கோர்ட்டியட் தேவாலயம் உதவியுடன் கிறிஸ்தவ  மதபோதகராக செயல்பட்டு வருகிறார். இவரது பிள்ளைகள் ஆரோன் நாயக் (17), ஷரோன்  நாயக் (14), ஜோய் நாயக் (15) ஆகியோர் மிசிசிபியில் உள்ள பிரெஞ்சு கேம்ப் அகாடமியில் படித்து வந்தனர்.   இவர்கள் 3 பேரும் மெம்பிசில் உள்ள டென்னிஷி  பகுதியில் உள்ள காரி கோடிரிட் என்பவரது  வீட்டுக்கு கிறிஸ்துமசை கொண்டாட சென்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு 11 மணியளவில் அங்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கி  ஆரோன், ஷரோன், ஜோய் மற்றும் காரி கோடிரிட் ஆகிய 4 பேர் தீயில் கருகி  உயிரிழந்தனர். காரி கோடிரிட்டின் கணவர் டேனி மற்றும் அவர்களது மகன் கோல் ஆகியோர் லேசான தீக்காயத்துடன் உயிர் தப்பினர். தீ  விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நகர மேயர் ஸ்டான் ஜோய்னர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : brothers ,sisters ,Telangana ,fire ,US , 3 brothers,sisters,Telangana, US fire
× RELATED சங்ககிரி அருகே கழுகை விரட்ட...