×

காவிரியிலும், மேகதாது அணையிலும் மத்திய அரசு துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: மத்திய அமைச்சருக்கு திமுக கண்டனம்

சென்னை: காவிரியிலும், மேகதாது அணையிலும் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு  செய்துள்ள துரோகத்தை ஒருபோதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்க  மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:முல்லைப் பெரியாறு வரலாறே தெரியாத மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் திமுக துரோகம் செய்து விட்டது என்று அபாண்டமாக பழி சுமத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.   1989ல் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தி உத்தரவிட்ட வர் கலைஞர் என்ற அடிப்படை உண்மையாக்கூட தெரிந்து கொள்ளாமல் மத்திய அமைச்சர் பேசியிருப்பது கொஞ்சம் கூட அழகல்ல. 2000ம் வருட வாக்கில் 136 அடியிலிருந்து 142 அடி உயர்த்தலாம் என்று மத்திய நிபுணர் குழுக்களிடம் பரிந்துரை பெற்றது, 2006ல் ஆட்சிக்கு வந்த பிறகு உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, கேரள முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்து சுமுகமான தீர்வுக்கு பாடுபட்டது, அதன் பிறகு டிசம்பர் 2006ல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் மற்றும் தமிழக, கேரள பொதுப்பணித்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச வழி வகுத்தது. காவிரி பிரச்னையில் மத்திய பா.ஜ.க. அரசு செய்த துரோகங்களையும், அதை வேடிக்கை பார்த்த அதிமுக அரசின் மவுனத்தையும் பட்டியல் போட பக்கங்கள் போதாது.

 அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று விதண்டாவாதம் செய்தது காவிரி வரைவு திட்டம் அமைக்க கால தாமதம் செய்தது கதைக்கு உதவாத வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக தாக்கல் செய்தது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இறுதி தீர்ப்பின் அடிப்படையிலான தண்ணீரை 4.75 டி.எம்.சி குறைக்க காரணமாக இருந்தது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் இன்றும் நிரந்தர தலைவர் போடாமல் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இருப்பது. மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி கோரி கர்நாடக மாநில அரசு எழுதிய கடிதத்தை முதலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்பு வைக்காமல் மறைத்தது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்அனுமதி இல்லா மல் மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணைகட்டும் திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியது, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை பிசுபிசுக்க வைத்தது எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சிதான் என்பது தமிழக மக்களுக்கும், காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் நன்கு தெரியும். இந்த தமிழக விரோத செயல்களை இங்குள்ள அதிமுக அரசு வேடிக்கை பார்த்தது என்பதும், அந்த அரசுக்கு ஆதரவாகத்தான் திமுக துரோகம் செய்து விட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார்.

இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஊழல் அதிமுகவிற்கும் பா.ஜ.க.விற்கும் எங்கள் தலைவர் சொன்னது போல் அமையப் போகும் கொள்ளைக் கூட்டணியை அம்பலத்திற்கு கொண்டு வந்திரு க்கிறது.அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்திற்காக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், சோனியா காந்தியிடமும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியிடமும், மேகதாது பிரச்னை பற்றி எடுத்து கூறியிருக்கிறார். எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடமும் மேகதாது பிரச்னை பற்றி பேசி வலியுறுத்தியிருக்கிறார். இது எதையுமே அறிந்தும் அறியாதவர் போல் மத்திய அமைச்சர் பேசியிருப்பது அவருக்கு எங்கிருந்தோ அதிமுகவை ஆதரித்துப் பேசு என்று வந்த கட்டளை என்றே தெரிகிறது. காவிரியில் நடைபயணம் மேற்கொண்டு காவிரி வரைவு திட்டத்தை அமைக்க பாடுபட்டவர் எங்கள் தலைவர்.  ஆகவே, இதை மறைத்துப் பேசினால் தமிழக மக்கள் தங்களை நம்பி விடுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நினைத்தால் அது அவர் காணும் பகல் கனவாகவே முடியும் என்றும், காவிரியிலும், மேகதாது அணையிலும் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள துரோகத்தை ஒருபோதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். காவிரி பிரச்னையில் மத்திய பா.ஜ.க. அரசு செய்த துரோகங்களையும், அதை வேடிக்கை பார்த்த அதிமுக அரசின் மவுனத்தையும் பட்டியல் போட பக்கங்கள் போதாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Union Minister ,Central Government ,Kaveri ,treachery ,Megadeth Dam , Central government,treacherous , Cauvery , Tamil Nadu people,forgive, DMK condemns, federal minister
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்