புதுடெல்லி: டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்தித்தனர். சந்திப்பில் புயல் நிவாரணத்திற்கு தேவையான ரூ.3216 கோடி நிதியை தருமாறு வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மத்திய அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார் என அமைச்சர் வேலுமணி கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி