×

நாட்டிலேயே முதல்முறையாக ஏரியில் மிதக்கும் சோலார் தகடுகளால் 2 மெகாவாட் மின்சார உற்பத்தி: விசாகப்பட்டினம் மாநகராட்சி அசத்தல்

திருமலை: நாட்டிலேயே முதல்முறையாக ஏரி நீரில் மிதக்கும் சோலார் தகடுகளால் 2 மெகாவாட் மின்சார உற்பத்தியை விசாகப்பட்டினம் மாநகராட்சி தொடங்கி அசத்தியுள்ளது.ஆந்திர மாநிலம். விசாகப்பட்டினம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி கார்ப்ரேஷன் திட்டத்தின் கீழ் முடசர்லோவாவா ஏரியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுவரை 10  முதல் 500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட நிலையில் முதல் முறையாக 2000 கிலோ வாட் (2 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக விசாகப்பட்டினம் மாநகராட்சி  இந்த சோலார் தகடுகளை 7 மாதத்தில் அமைத்துள்ளது.

ஏரியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சோலார் தகடுகள் மூழ்காத வகையில்  ஏரியில் உள்ள தண்ணீரின் அலையினாலும்  பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக  விசாகப்பட்டினம் மாநகராட்சிக்கு தினந்தோறும் ₹50 ஆயிரம் சேமிக்கப்பட்டுள்ளது.இந்த சோலார் பிளான்ட் மூலமாக 25 ஆண்டுகளுக்கு மின்சார உற்பத்தி  செய்யப்பட உள்ளது. இதனால் 1,540 டன் நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி எரிப்பதால் 3080 டன் கார்பன்டை  ஆக்சைடு வெளியீட்டின்  பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும், ஏரியில் உள்ள தண்ணீர் ஆவியாவதை தவிர்க்கும் விதமாகவும், தண்ணீரில் உள்ள உயிரினங்களுக்கும்  பாதிக்காத வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மின்சார சேமிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செய்யும் விதமாக இதுபோன்ற பல திட்டங்களை செயல்படுத்த விசாகப்பட்டினம் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,time ,Visakhapatnam Corporation , Float,country, Solar panels, 2 MW Electricity
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!