×

ராசிபுரம் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து : 25 பயணிகள் படுகாயம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே சென்டர் மீடியனில் சொகுசு பஸ் மோதி கவிழ்ந்த விபத்தில 24 பயணிகள் காயமடைந்தனர். ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், 35 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சென்டர் மீடியன் மீது மோதி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள், குழந்ைதகள் உட்பட 24 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், பஸ்சில் இருந்தவர்களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிலர், மேல்சிகிச்சைக்காக சேலம் மற்றும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார், பஸ் டிரைவரான சங்ககிரி அருகே மகுடஞ்சாவடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(36) என்பவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rasipuram ,passengers , Rasipuram, luxury bus, passenger
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து