×

இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் சென்ற பேருந்து விபத்து : ஒருவர் பலி , 24பேர் காயம்

ஸ்ரீநகர் : ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 1 இந்தோ-திபெத்திய எல்லை பிரிவு போலீசார்  உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் கோனி நலா பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்த பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

alignment=

இந்த பேருந்தில் 35 இந்தோ-திபெத்திய எல்லை பிரிவு போலீசார் பயணம் செய்தனர். ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வளையும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இல்லாமல் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து ரம்பன் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் இதுவரை காயமடைந்த 24பேரை மீட்டுள்ளதாகவும் ,  ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

alignment=


மேலும் படுகாயமடைந்தவர்களை முதலில் மீட்கப்படுவதாகவும், மீட்கப்பட்டவர்கள் ரம்பன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேல் சிகிச்சை தேவைப்படும் வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஜம்முவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : border police ,bus accident ,Indo-Tibetan , ITBP ,bus ,injured ,Jammu,Srinagar , Accident
× RELATED பத்தலப்பல்லி சோதனைச்சாவடி அருகே ஒற்றை யானை நடமாட்டம்